ஓமந்தை சோதனை சாவடி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்

கடந்த திங்கட்கிழமையில் இருந்து அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலர் நிசா பிஸ்வால் இலங்கைக்கு வருகை தந்து ஒரு சில மணி நேரத்தில் நிறுத்தப்பட்ட ஓமந்தை சோதனை நடவடிக்கைகள் மீண்டும் இன்று முதல் (5.2) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வாகனப்பதிவுகள் எதுவுமின்றி வடக்கில் இருந்து தெற்கிற்கும் தெற்கில் இருந்து வடக்கிற்கும் மக்கள் சென்று வர அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மூன்று நாட்களின் பினனர் மீண்டும் சோதனை நடவடிக்கைகளும் வாகனப்பதிவுகள் இடம்பெற்று வருகின்றது.

கடந்த செவ்வாய்க்கிழமை சோதனை நிறுத்தப்பட்டதையடுத்து அங்கு செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது.