அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை பெற வந்த பெண்களை வலி நிவாரண மாத்திரைகள் கொடுத்து கற்பழித்த மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா (Pennsylvania)நகரில் வசிக்கும் ஜேய். ஜெ. சோ (Jay J. Cho Age-71) என்ற மருத்துவரிடம் பல்வேறு விதமான வலிகளால் அவஸ்தைப்பட்டு வந்த 12 பெண்கள் சிகிச்சை பெற வந்துள்ளனர்.
அப்போது அவர்களுக்கு 'ஆக்சிகோடோன்' (Oxycodone)என்ற வலி நிவாரண மாத்திரையை சோ தந்துள்ளார். இந்த மாத்திரையை தொடர்ந்து பயன்படுத்தி வந்த அப்பெண்கள் அதற்கு அடிமையாகிவிட்டார்கள்.
இந்த வாய்ப்பை தனக்கு சாதமாக பயன்படுத்திக்கொண்ட சோ, மாத்திரை தரவேண்டுமென்றால் தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார். சோவின் நிபந்தனைக்கு ஒப்புக்கொள்ளாவிட்டால் எங்கே தங்களுக்கு இந்த மாத்திரை கிடைக்காதோ என்று பயந்த பெண்கள் அவரது ஆசைக்கு இணங்கியுள்ளார்.
இவ்வாறு 12 பெண்களை தனது வலையில் வீழ்த்தி அவர் கற்பழித்துள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இந்நிலையில் இவரால் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், சோ-வை கைது செய்ய நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டது.
இதனையடுத்து சரணடைந்த அவரிடம் தற்போது பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா (Pennsylvania)நகரில் வசிக்கும் ஜேய். ஜெ. சோ (Jay J. Cho Age-71) என்ற மருத்துவரிடம் பல்வேறு விதமான வலிகளால் அவஸ்தைப்பட்டு வந்த 12 பெண்கள் சிகிச்சை பெற வந்துள்ளனர்.
அப்போது அவர்களுக்கு 'ஆக்சிகோடோன்' (Oxycodone)என்ற வலி நிவாரண மாத்திரையை சோ தந்துள்ளார். இந்த மாத்திரையை தொடர்ந்து பயன்படுத்தி வந்த அப்பெண்கள் அதற்கு அடிமையாகிவிட்டார்கள்.
இந்த வாய்ப்பை தனக்கு சாதமாக பயன்படுத்திக்கொண்ட சோ, மாத்திரை தரவேண்டுமென்றால் தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார். சோவின் நிபந்தனைக்கு ஒப்புக்கொள்ளாவிட்டால் எங்கே தங்களுக்கு இந்த மாத்திரை கிடைக்காதோ என்று பயந்த பெண்கள் அவரது ஆசைக்கு இணங்கியுள்ளார்.
இவ்வாறு 12 பெண்களை தனது வலையில் வீழ்த்தி அவர் கற்பழித்துள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இந்நிலையில் இவரால் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், சோ-வை கைது செய்ய நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டது.
இதனையடுத்து சரணடைந்த அவரிடம் தற்போது பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.