இலவச WiFi இணைப்புக்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை

நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களில் இலவச ‘வை – பை’  (WiFi) இணைப்புக்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் தொலைத்தொடர்பாடல் பிரதியமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன் முதற்கட்டமாக எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னதாக கொழும்பு மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த 250 இடங்களில் இலவச ‘வை – பை’ இணைப்புக்கள் வழங்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

மேலும் இரண்டாம் கட்டப் பணிகள் முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் 750 இடங்களுக்கு இலவச ‘வை-பை’ இணைப்புக்கள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.