பெப்சி நிறுவனம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட இருக்கின்றது

உலகின் பிரபல குளிர்பான நிறுவனமாக இருக்கும் பெப்சி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை சீனாவில் வெளியிட இருக்கின்றது. இந்த, ஆண்ட்ராய்டு கருவிக்கு" பெப்சி பி1" என பெயரிடப்பட்டுள்ளது.

சீனாவில் மட்டும் விற்பனைக்கு வரும் இந்த கருவி ரூ.13,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் படி பெப்சி பி1 கருவியானது அக்டோபர் மாதம் 20 ஆம் திகதி வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சிறப்பம்சங்கள்

5.5 இன்ச் 1080பி டிஸ்ப்ளே, 1.7 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர், 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டர்னல் மெமரியும், 13 எம்பி ப்ரைமரி கமெராவும், 5 எம்பி முன்பக்க கமெராவும், ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 இயங்குதளமும் கொண்டிருக்கின்றது.