இன்று இரவுமுதல் எரிபொருட்களின் விலைகள் குறைகிறது

 இன்று  ( 21-01-2015 )நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி 150 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெற்றோல், 33 ரூபாய் குறைவடைந்து 117 ரூபாவாகவும் 158 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர்  95 ஒக்டேன் பெற்றோல், 30 ரூபாய் குறைவடைந்து  128 ரூபாவாகவும்  விற்பனையாகவுள்ளது.

அத்துடன், 133 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் சுப்பர் டீசல், 23 ரூபாய் குறைவடைந்து 110 ரூபாவாகவும் 111 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் டீசல், 16 ரூபாய் குறைவடைந்து 95 ரூபாவாகவும் விற்பனையாகவுள்ளது.

இதேவேளை, 81 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் மண்ணெண்ணெய், 16 ரூபாய் குறைவடைந்து  65 ரூபாவாக விற்பனையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.