கடலில் மூழ்கிக்கொண்டிருந்த காரிலிருந்து பெண்ணை மீட்ட பொலிஸார்

கடலில் வீழ்ந்து மூழ்­கிக்­கொண்­டி­ருந்த காரொன்றின் கண்­ணா­டியை பொலிஸ் உத்­தி­யோ­கஸ்­தர்கள் இருவர் கருங்­கல்­லினால் உடைத்து, அக்­கா­ருக்குள் சிக்கித் தவித்த பெண்ணை மீட்ட சம்­பவம் நியூஸிலாந்தில் இடம்­பெற்­றுள்­ளது.

நியூஸிலாந்தின் வெய்­டெ­மெட்டா துறை­மு­கத்­துக்கு அரு­கி­லுள்ள வீதியில் 63 வய­தான பெண்­ணொ­ருவர் செலுத்திச் சென்ற கார் பாதை­யை­விட்டு விலகி துறை­முக கடற்­ப­கு­திக்குள் வீழ்ந்­தது.

காரை­விட்டு வெளி­வர முடி­யாமல் அப்பெண் தவித்­துக்­கொண்­டி­ருக்க, அந்த பி.எம்.டபிள்யூ. படிப்­ப­டி­யாக நீரில் மூழ்கிக் கொண்­டி­ருந்­தது.

சாரதி ஆச­னத்­தை­விட்டு பின் ஆச­னத்­துக்கு தவழ்ந்து வந்த அப்பெண், கண்­ணா­டியை தட்டி உதவி கோரினார்.

இதை அவ­தா­னித்த இரு பொலிஸ் உத்­தி­யோ­கஸ்­தர்கள் நீரில் குதித்து அப்­பெண்ணை காப்­பாற்ற முயன்­றனர். ஆனால், அவர்­களால் காரின் கதவை திறக்க முடி­ய­வில்லை. பொலிஸார் பயன்­ப­டுத்தும் குண்­டாந்­த­டி­யினால் காரின் கண்­ணா­டியை உடைக்க முடி­ய­வில்லை. இறு­தியில் பொலிஸ் கான்ஸ்­டபிள் போல் வட்ஸ், பாரிய கல் ஒன்­றினால் கண்­ணா­டியை உடைத்து அப்­பெண்ணை மீட்க வழி­வ­குத்தார்.

அதற்­குமுன் தன்னை காப்­பாற்­று­வார்­களா எனத் தெரி­யாமல் மிகவும் பீதி­ய­டைந்த நிலையில் அப்­பெண்­கா­ணப்­பட்டார். 

சிறிது நேரம் தாம­தி­­த்தி­ருந்­தாலும் அப்­பெண்ணின் உயி­ருக்கு ஆபத்து ஏற்­பட்­டி­ருக்­கலாம் எனக் கரு­தப்­ப­டு­கி­றது. ஏனெனில் மேலும் ஒரு நிமி­டத்­துக்குப் போது­மான வளியே காருக்குள் இருந்­தது. அத்­துடன் அப்­பெண்ணை வெளியே எடுத்து 40 விநா­டி­களில் அக்கார் மேலும் நீருக்குள் சென்­று­விட்­ட­தாக மேற்­படி கான்ஸ்­டபிள் தெரிவித்துள்ளார்.

இக் கார் கடலில் எவ்வாறு வீழ்ந்தது என்பது தொடர் பாக நியூஸிலாந்து பொலிஸார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.