பிரிட்டனில் திருமணப் பதிவின்போது தனது மணப்பெண்ணின் பெயரை மறந்த மணமகன் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் பிரஜையான ஸுபைர் கான் (28) என்பவர் பிரிட்டனில் தொடர்ந்தும் தங்கியிருப்பதற்காக அங்குள்ள பெண்ணொருவரை போலியாக திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
ஹங்கேரியிலிருந்து பிரிட்டனில் குடியேறிய பீட்டா ஸிலாகி எனும் 33 வயதான யுவதி இப்போலி திருமணத்துக்கு ஒப்புக்கொண்டார்.
எனவே, இப்பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக காட்டிக்கொள்வதன் மூலம் தனக்கு பிரித்தானிய பிரஜாவுரிமை கிடைக்கும் என ஸுபைர் கான் எதிர்பார்த்துள்ளார்.
ஆனால், இப்போலி திருமணத்துக்கு சம்மதித்த பெண்ணின் பெயர் ஸுபைர் கானுக்கு நினைவில் இல்லை. அதனால், திருமணப் பதிவு அலுவலகத்தில் வைத்து மணமகளின் பெயரை அறிவதற்காக இத்திருமண ஏற்பாட்டாளரை தொலைபேசி மூலம் அழைத்துள்ளார்.
இதனால் திருமணப் பதிவு அதிகாரிக்கு சந்தேகம் ஏற்படவே அவர் பிரித்தானிய உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இது தொடர்பான விசாரணையின்போது தாம் போலி திருமணமொன்றை நடத்துவதற்கு திட்டமிட்டதை ஸுபைர் கானும் பீட்டா ஸிலிகியும் ஒப்புக்கொண்டனர்.
அதையடுத்து இவ்விருவருக்கும் முறையே 20 மற்றும் 17 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருமண ஏற்பாட்டாளரான காலிக் கான் என்பவருக்கும் 20 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரஜையான ஸுபைர் கான் (28) என்பவர் பிரிட்டனில் தொடர்ந்தும் தங்கியிருப்பதற்காக அங்குள்ள பெண்ணொருவரை போலியாக திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
ஹங்கேரியிலிருந்து பிரிட்டனில் குடியேறிய பீட்டா ஸிலாகி எனும் 33 வயதான யுவதி இப்போலி திருமணத்துக்கு ஒப்புக்கொண்டார்.
எனவே, இப்பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக காட்டிக்கொள்வதன் மூலம் தனக்கு பிரித்தானிய பிரஜாவுரிமை கிடைக்கும் என ஸுபைர் கான் எதிர்பார்த்துள்ளார்.
ஆனால், இப்போலி திருமணத்துக்கு சம்மதித்த பெண்ணின் பெயர் ஸுபைர் கானுக்கு நினைவில் இல்லை. அதனால், திருமணப் பதிவு அலுவலகத்தில் வைத்து மணமகளின் பெயரை அறிவதற்காக இத்திருமண ஏற்பாட்டாளரை தொலைபேசி மூலம் அழைத்துள்ளார்.
இதனால் திருமணப் பதிவு அதிகாரிக்கு சந்தேகம் ஏற்படவே அவர் பிரித்தானிய உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இது தொடர்பான விசாரணையின்போது தாம் போலி திருமணமொன்றை நடத்துவதற்கு திட்டமிட்டதை ஸுபைர் கானும் பீட்டா ஸிலிகியும் ஒப்புக்கொண்டனர்.
அதையடுத்து இவ்விருவருக்கும் முறையே 20 மற்றும் 17 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருமண ஏற்பாட்டாளரான காலிக் கான் என்பவருக்கும் 20 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
